தூய ஜெபமாலை அன்னை ஆலயம்
               Radhapuram
MAY GOD'S GRACE BE WITH YOU...ENGLISH
எம்மைப் பற்றி

இந்த இணையதளமானது புனித. தொன்போஸ்கோ இளைஞர் இயக்கத்தி- னரால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகி- றது. இராதாபுரம், தூய ஜெபமாலை அன்னையின் பக்தர்கள் இணைய- தளத்தின் மூலமாக தகவல்களைப் பெற இவ்விணையதளம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நம் பங்கின் வளர்ச்சிக்கு இத்தளம் உறுதுணையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த இணையதளமானது இராதாபுரம் பங்கின் அதிகாரப் பூர்வ தளம் என்று பங்குத் தந்தை டெ.செ.அன்புச்செல்வன் அவர்களால் அங்கீகரிக்கப்- பட்டுள்ளது.

ஜெபமாலை அன்னை
ஜெபம்
புகைப்படங்கள்
நிகழ்வுகள்
பிற தளங்கள்
ஜெபம்

சிலுவை அடையாளம்: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே , அமென் .

விசுவாசப் பிரமாணம்:பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சருவேசுரனை விசுவசிக்கின்றேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாயகன் இயேசுகிறிஸ்துவையும் விசுவசிக்கின்றேன். இவர் பரிசுத்த ஆவியினால் கற்பமாய் உற்பவித்து கன்னிமரியாளிடம் இருந்து பிறந்து போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டு பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடம் இருந்து உயிர்த்தெழுந்தார்.பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சருவேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கின்றார்.அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுதீர்க்கவருவார்.பரிசுத்த ஆவியை விசுவசிக்கின்றேன்.பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கின்றேன்.புனிதர்களின் சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கின்றேன். பாவப் பொறுத்தலை விசுவசிக்கின்றேன். சரிர உத்தானத்தை விசுவசிக்கின்றேன். நித்திய சீவியத்தை விசுவசிக்கின்றேன். ஆமென்.

இயேசு கற்பித்த செபம்: பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக, உம்முடைய இராச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப் படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக. எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்கு தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பது போல எங்கள் பாவங்களை பொறுத்தருளும். எங்களை சோதனையில் விழவிடாதேயும். தீமையில் இருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.

மங்கள வார்த்தை செபம்: அருள் நிறைந்த மரியாயே வாழ்க கர்த்தர் உம்முடனே பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே, அர்ச்சியேஸ்ட மரியாயே சருவேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்

திரித்துவப் புகழ்: பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்தது போல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்.

பாத்திமா ஜெபம்: ஓஅ என் இயேசுவே எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து இரட்சித்தருளும். சகல ஆத்துமாக்களையும் பரலோக பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் அதிகமாய் வேண்டியவர்களுக்கு விசேட உதவி செய்தருளும். ஆமென்.

கிருபைதாயாபரத்துச் செபம்: கிருபைதயாபரத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க எங்கள் சீவமே எங்கள் மதுரமே எங்கள் தஞ்சமே வாழ்க பரதேசிகளாய் இருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள் உம்மைப் பார்த்து கூப்பிடுகின்றோம். இந்தக் கண்ணீர் கனவாயிலிருந்து பிரலாபித்து அழுது உம்மையே நோக்கிப் பெருமூச்சுவிடுகின்றோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகின்ற தாயே உம்முடைய தாயாபரமுள்ள திருக்கண்களை எங்கள் மேலே திருப்பியருளும். இதனன்றியே நாங்கள் இந்தப் பிரதேசங் கடந்த பிற்பாடு உம்முடைய திருக்குமாரனாகிய இயேசு நாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்கு தந்தருளும். கிருபாகரியே தயாபரியே பேரின்ப இரசமுள்ள கன்னி மரியாயே. ஆமென்

முதல்: இயேசுகிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக.

துணை: சாருவேசுரனுடைய பரிசுத்த தேவமாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

காணிக்கை செபம்: அத்தியந்த மகிமையுள்ள பரலோக இராசேஸ்வரியான பரிசுத்த தேவமாதாவே உம்முடைய திருபாதத்தை நாங்கள் நமஸ்கரித்து இந்தச் செபமாலைத் தியானத்தை உமக்குப் பாத காணிக்கையாக வைத்து ஒப்புக்கொடுக்கின்றோம். இதை நீரே கையேற்று உம்முடைய திருக்குமாரனிடத்திலே கையளித்து இதிலே நாங்கள் தியானித்த மறை நிகழ்ச்சிகளுடைய பலனை அடையவும் சுகிரேத போதனையின் படியே நடந்து இவ்வுலகத்திற் சகல விக்கினங்களும் நிவாரணமாகவும் பரலோகத்திலே உம்மோடே உம்முடைய திருக்குமாரனுடைய மோட்சமுக தரிசனையைக் கண்டு களிகூர்ந்திருக்கவும் ஒத்தாசை பண்ணியருளும் தாயாரே. ஆமென்

© All rights reserved. 2010. www.jebamalaimatha.com powered by Mesiver