இராதாபுரம் பங்கு தளத்தைப் பற்றி
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரே, கிறிஸ்துவின் ஒளி இராதாபுரத்தை அடைந்துவிட்டது. அப்போது இராதாபுரம் இப்பகுதியின் தாய்ப் பங்கான வடக்கன்குளம் பங்கின் கிளைப் பங்காக இருந்தது. பின்னர் இடிந்தகரை பங்காக உயர்த்தப்படும் போது அதன் கிளைப் பங்கானது. இறுதியாக துரைகுடியிருப்பின் கிளைப் பங்காக தன் பயணத்தை தொடர்ந்தது.
2004 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் நாள், அன்னையின் ஒன்பதாம் திருவிழாவன்று, தூத்துக்குடி மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலன பேராயர் , மேதகு. பீட்டர் பெர்நாந்து அவர்களால் பங்காக உயர்த்தப்பட்டது.
கிளைப் பங்குகள்:
ஆத்துக்குறிச்சி (உலக மீட்பர் ஆலயம்)
பிரகாசபுரம் (புனித. இஞ்ஞாசியார் ஆலயம்)
பரமேஸ்வரபுரம் (அற்புத மாதா ஆலயம்)
தந்தை. இருதயராஜா (2004-2006) இப்பங்கின் முதல் பங்குத் தந்தை ஆவார்.
தந்தை. டெ.செ.அன்புச்செல்வன் 2006 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
|